Dried neem flowers , வேப்பம்பூ(Vepampoo)Neem flowers are a stimulant, anti-helmentic, antibiotic and a blood purifier. They are used to treat atonic dyspepsia, jaundice, and relieves anorexia and nausea. The carminative compounds in neem flowers, aids in indigestion, increases appetite, soothe an upset stomach, and neutralize gastric acidsதமிழர்களின் பண்பாட்டோடும், பழக்க வழக்கங்களோடும் பிணைந்துள்ள வேம்பின் அனைத்து பாகங்களும் பயனுடையவை என்று சித்தர்கள் தெரிவித்துள்ளனர்.அதில் வேப்பம்பூவின் நன்மை பார்ப்போம். இதனாலேயே கிராமத்தில் மருந்தாகவும் சிறப்பிக்கப்படுகிறது. இன்றும் சக்தியின் வடிவமாக இன்றும் கிராமங்களில் வழிபடப்படுகிறது. இயற்கையின் வரப்பிரசாதமான இம்மரத்தின் வேர், பட்டை, இலை, பூ, காய், பழம், விதை, எண்ணெய் என அனைத்துப் பகுதிகளும் பயன் தர வல்லவை. வேப்பம்பூவை ஒரு கைப்பிடி அளவு எடுத்து அவற்றை நீரில் ஊற வைத்த பின்பு அந்த நீரை தினம்தோறும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் கெட்ட கொழுப்பு நீங்கி உடல் பருமன் மெதுவாக குறைய காணலாம். வாயுத்தொல்லை, ஏப்பம் அதிகமாக வருதல், பசியின்மை போன்றவைகளுக்கு இந்த பூக்களை மென்று தின்றால் ஒருவாரத்தில் நிவாரணம் கிடைக்கும். கொதிக்க வைத்த நீரில் வேப்பம் பூவை போட்டு ஆவி பிடித்தால் தலைவலி, காது வலி நீங்கும். இம்மரக்காற்று பல வியாதிகளை குணப்படுத்தும். வேப்பம்பூ கொஞ்சம் எடுத்து சாப்பிட்டு வந்தால் தொண்டையில் ஏற்பட்ட புண் விரைவில் குணமாகும். இப்பூவை நன்றாக உலரவைத்து அவற்றை நன்கு அரைத்து சம அளவு கலந்து காற்றுப் புகாத இடத்தில் வைத்து தினந்தோறும் கண்களின் மேல் பூசி வந்தால் கண்கள் பளிச்சென்று மாறும். உடலுக்கு தீங்கின்றி குடலில் உள்ள கிருமிகளை ஒழிக்கும். சிறுவர்களின் வயிற்றை சுத்தப்படுத்த வாரத்திற்கு இருநாட்கள் வேப்பம்பூ கசாயம் வைத்து குடிக்க கொடுக்கலாம். இப்பூவில் துவையல், ரசம் செய்து சாப்பிட்டு வந்தால் பித்தம், குமட்டல், வாந்தி, மயக்கம் குணமாகும். 5 கிராம் உலர்ந்த இப்பூவை 50 மில்லி தண்ணீர் விட்டு மூடி வைத்திருந்து, வடிகட்டிச் சாப்பிட்டு வரப் பசியின்மை, உடல் தளர்ச்சி நீங்கும். |
₹ 150.00 /100 Gram |
Add to Cart |
On Sale |